இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் - பசில் ராஜபக்சே ராஜினாமா..!

இலங்கை:

மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்ச தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் அரசுப் பதவியில் இருக்கக் கூடாது என்று மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இலங்கை நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை நாடாளுமன்ற செயலாளரிடம் பசில் ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தை இன்று வழங்கினார். இதைதொடர்ந்து பசில் ராஜபக்ச பேசுகையில், இனிவரும் காலங்களில் எந்த அரசு பதவியையும் வகிக்கப் போவதில்லை ;எம்.பி. பதவியை துறந்தாலும், அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

                                                                                                                                                  –Laxman

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com