தமிழகக் கோட்டைக்குச் செல்லும் ஒரே தலைவர் தளபதி மட்டும்தான்! - தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அதிரடி முழக்கம்!

ரூபாய் செலவில்லாமல் கூடிய பத்தாயிரம் பேர் - இது வரலாறு படைக்கும் இயக்கம்! - சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் எழுச்சி உரை


தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வரும் நிலையில், சென்னை மாநகரமே வியக்கும் வண்ணம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு நிகழ்ச்சியில், கட்சியின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பங்கேற்று எழுச்சிமிக்க உரையை ஆற்றினார்.

சென்னையில் திரண்ட போர்ப்படை: 

மாவட்டக் கழகச் செயலாளர்களால் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தன், அர்ஜுன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடையில் பேசிய செங்கோட்டையன், தொண்டர்களின் எழுச்சியைக் கண்டு வியந்து பாராட்டிய விவரங்கள் இதோ:

செலவில்லாத எழுச்சி: 

பொதுவாக இது போன்ற பத்தாயிரம் பேர் கூடும் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றால் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும். ஆனால், ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யாமல் இங்குத் திரண்டிருக்கும் இந்த மக்கள் கூட்டம், 'தளபதி' விஜய்யின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குச் சான்று, என அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


1996-ம் ஆண்டின் எதிரொலி:


 1996-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மக்கள் மத்தியில் கண்ட அதே ஆர்ப்பரிப்பை இப்போதும் காண்பதாகவும், இது 2026-ல் தளபதி விஜய் அவர்கள் ஆட்சி அமைக்கப் போவதற்கான வரலாற்று அறிகுறி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஊழலற்ற ஆட்சி” - தலைவரின் முழக்கம்: 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்வைத்த 'ஊழலற்ற ஆட்சி' என்ற ஒற்றை முழக்கம் இன்று ஒட்டுமொத்தத் தமிழக அரசியலையும் அதிர வைத்துள்ளது. "தலைவர் சொன்ன அந்த இரண்டே வரிச் சொல்லுக்காக இன்று பலரும் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் வருவார், வெற்றியைச் சூடுவார்," என செங்கோட்டையன் முழங்கினார்.

234 தொகுதிகளிலும் தளபதியே வேட்பாளர்: 

தேர்தல் வியூகம் குறித்துப் பேசிய அவர், "அவர் எங்கே நிற்கப் போகிறார் என்பது முக்கியமல்ல; 234 தொகுதிகளிலும் அவர்தான் நிற்கிறார். அவர் அடையாளம் காட்டும் வேட்பாளர்தான் நாளை புனித ஜார்ஜ் கோட்டைக்குச் செல்ல முடியும். இனி வேறு யாராலும் தமிழகக் கோட்டைக்குள் நுழைய முடியாது," என அதிரடியாகத் தெரிவித்தார்.

பெண்களுக்கான உரிமை - அதிகாரிகளின் மரியாதை:

தவெக-வில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு உரிமையைக் கண்டு மற்ற இயக்கங்கள் பயந்து போயுள்ளதாகவும், 'சக்தியும் சிவனும்' ஒன்றாக இருக்கும் இடம் இதுவென்றும் அவர் வர்ணித்தார். இன்னும் 90 நாட்களில் காலம் மாறப்போகிறது என்றும், அதிகாரிகள் உங்களை (தொண்டர்களை) மதித்து வரவேற்கும் காலம் விரைவில் வரும் என்றும் கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.





Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk