வாழப்பாடி அருகே மலைவாழ் மக்கள் சாலை மறியல்: பேருந்து வசதி வேண்டி அரசு மற்றும் கல்லூரி வாகனங்கள் சிறைபிடிப்பு! Tribal Villagers Protest Near Vazhapadi: Block Buses Demanding Transport Facilities for Mountain Villages.

வாழப்பாடி அருகே மலைவாழ் மக்கள் சாலை மறியல்: பேருந்து வசதி வேண்டி அரசு மற்றும் கல்லூரி வாகனங்கள் சிறைபிடிப்பு! Tribal Villagers Protest Near Vazhapadi: Block Buses Demanding Transport Facilities for Mountain Villages.

“20 கி.மீ. நடைப்பயணமா?” - பொங்கலுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் அரசு ஆவணங்களைத் திருப்பித் தரப்போவதாகத் தார்மீகக் கோபம்!

வாழப்பாடி, டிசம்பர் 31: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேருந்து வசதி கோரி பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், அரசுப் பேருந்து மற்றும் தனியார் கல்லூரி வாகனங்களைச் சிறைபிடித்துச் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகச் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் எல்லைப் பகுதியான சேலூர் பிரிவு ரோட்டில் இந்த அதிரடிப் போராட்டம் நடைபெற்றது. பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளாத அரசு நிர்வாகத்தைக் கண்டித்து, “எங்கள் உயிரோடு விளையாடாதீர்கள்” என ஆவேசக் குரல் எழுப்பிய கிராம மக்கள், பொங்கல் பண்டிகைக்குள் பேருந்து வசதி கிடைக்காவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்பதோடு, ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை அரசிடமே ஒப்படைக்கப் போவதாகத் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள மாங்கடை மலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அடிப்படைப் போக்குவரத்து வசதி வேண்டி இன்று ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். மோட்டுவளவு, மண்ணூர், கோவிந்தன் கடை, அம்மம்பாளையம் எனப் பத்துக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்குச் சரியான சாலை வசதியோ, பேருந்து போக்குவரத்தோ இல்லாததால் அன்றாட வாழ்க்கை நரகமாகி உள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மண்ணூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் சென்று வர மாணவர்கள் தினமும் 20 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடக்க வேண்டியுள்ளதாகவும், காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தலால் எந்நேரமும் உயிர் பயத்துடனேயே செல்ல வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

சுகாதார வசதியைப் பொறுத்தவரை, அவசர சிகிச்சைக்காக அரூர் அல்லது வாழப்பாடிக்குச் செல்ல சுமார் 35 கி.மீ. பயணம் செய்ய வேண்டியுள்ளது. “பேருந்து வசதி இல்லாததால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது” என அந்தப் பகுதி மக்கள் குமுறினர். பள்ளி கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர்களிடம் பலமுறை நேரில் முறையிட்டும், போக்குவரத்துத் துறை இயக்குநருக்கு மனுக்கள் அனுப்பியும் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததே இந்தத் திடீர் சாலை மறியலுக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டத்தால் சேலூர் பிரிவு சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், மக்கள் தங்களது பிடியில் உறுதியாக இருந்தனர். “வரும் பொங்கல் பண்டிகைக்குள் எங்கள் கிராமங்களுக்குப் பேருந்து வசதி செய்து தராவிட்டால், 2000-க்கும் மேற்பட்ட மக்கள் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்; எங்களின் ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திருப்பி ஒப்படைப்போம்” எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks