போடியில் ஜெயித்திருந்தால் இந்நேரம் அமைச்சராகி இருப்பேன்! - தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் உருக்கம்! Thanga Tamilselvan Speech in Theni: Would Have Become a Minister If I Won in Bodi

போடியில் ஜெயித்திருந்தால் இந்நேரம் அமைச்சராகி இருப்பேன்! - தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் உருக்கம்! Thanga Tamilselvan Speech in Theni: Would Have Become a Minister If I Won in Bodi

9,500 வாக்குகள் என் விதியை மாற்றியது! திமுகவின் அசைக்க முடியாத கூட்டணி 2026-லும் தொடரும்!

போடி சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தால், இன்று நான் தமிழக அமைச்சரவையில் ஒரு அமைச்சராகவே அமர்ந்திருப்பேன் எனத் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தனது அரசியல் ஏக்கத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் மாபெரும் விழாவில் கலந்துகொண்டு அவர் பேசினார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமையில் சுமார் 1,000 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட இந்த நிகழ்வில், தங்க தமிழ்ச்செல்வன் புதிய உறுப்பினர்களைப் பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்றார்.

பின்னர் மேடையில் உரையாற்றிய தங்க தமிழ்ச்செல்வன், “கடந்த சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் எந்த ஒன்றியத்திலும் திமுக முன்னிலை பெறவில்லை. அதனால் 9,500 வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோல்வியைத் தழுவினேன். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் இன்று அமைச்சராகக் கூட ஆகியிருப்பேன். ஆனால், மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வழங்கி மிகப்பெரிய அங்கீகாரத்தைத் தந்துள்ளார்கள். எல்லா ஒன்றியங்களிலும் திமுக முன்னிலை பெற்றது எனக்குக் கிடைத்த பெருமை. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவில் தற்போது இருக்கக்கூடிய இதே பலமான கூட்டணிதான் தொடரும்” என அரசியல் கள நிலவரத்தை ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களைப் பாராட்டிய அவர், “ஒரு கோடியே 50 லட்சம் பெண்களுக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது சாதாரணமான காரியம் அல்ல; இதற்காக ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எந்த முதலமைச்சராலும் செய்ய முடியாத இந்தச் சாதனையை மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்து வருகிறார். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வங்கி கணக்கிற்குப் பணம் சென்றடைவதை உறுதி செய்துள்ளார். என்னிடம் 1,000 ரூபாய் கொடுத்து மக்களிடம் வழங்கச் சொன்னால், அதில் 200, 300 ரூபாயை நான் எடுத்துக்கொண்டுதான் கொடுப்பேன். இது போன்ற முறைகேடுகள் நடக்காமல், மக்களுக்கான பணம் முழுமையாகக் கிடைக்கச் செய்த ஒரே முதலமைச்சர் நம் ஸ்டாலின் தான்” எனத் தனது பாணியில் கலகலப்பாகப் பேசித் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.




கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks