பீகார் தேர்தல் 2025: பாஜக கூட்டணி VS இந்தியா கூட்டணி.. இரண்டாம் கட்டப் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு! Bihar Elections 2025: Second Phase Campaign Ends Today

பீகார் தேர்தல் 2025: பாஜக கூட்டணி VS இந்தியா கூட்டணி.. இரண்டாம் கட்டப் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு! Bihar Elections 2025: Second Phase Campaign Ends Today

இந்தியா கூட்டணிக்கு 65 வோல்ட் அதிர்ச்சி: மீண்டும் சாதனை படைக்க பிரதமர் மோடி அழைப்பு; நாளை மறுநாள் 122 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரசாரம் இன்று (நவம்பர் 9, ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் நிறைவடைகிறது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி (மகா பந்தன்) ஆகிய இரு கூட்டணிகளின் தலைவர்களும் இறுதிக்கட்டத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்ட தேர்தல்

பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், முதல் கட்டமாக கடந்த நவம்பர் 6-ம் தேதி 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நடைபெற்றது.

முதல்கட்டத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் 65.08% வாக்குகள் பதிவாகின. இது, 73 ஆண்டுகளுக்குப் பிறகு பீகாரில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி தனது பிரசாரத்தின்போது, முதல் கட்டத் தேர்தல் முடிவுகள் மூலம் பீகார் மக்கள் இந்தியா கூட்டணிக்கு 65 வோல்ட் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாகவும், இதனால் அவர்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், இரண்டாம் கட்டத் தேர்தலிலும் அதேபோன்ற சாதனையைப் படைக்க வேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

இரண்டாம் கட்டத் தேர்தல் 

நாளை மறுநாள் நவம்பர் 11-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

முக்கியப் போட்டியாளர்கள்

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்கான நேரடிப் போட்டி பாஜக கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே நிலவுகிறது.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், பிரியங்கா காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த பிறகு, வாக்குப் பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொள்ள உள்ளது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks