செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு ஹரியானா பதிவு கார் உரிமையாளர் நதீம் கான் குறித்துப் போலீஸ் விசாரணை! Delhi Car Blast Death Toll Rises to 13: Hyundai i20 Owner Nadeem Khan Under Scrutiny

செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு ஹரியானா பதிவு கார் உரிமையாளர் நதீம் கான் குறித்துப் போலீஸ் விசாரணை!  Delhi Car Blast Death Toll Rises to 13: Hyundai i20 Owner Nadeem Khan Under Scrutiny

டெல்லி தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் ஆய்வு: டெல்லி வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறியத் தீவிர முயற்சி

தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நிகழ்ந்த சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக நெஞ்சைப் பதற வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் கிடைத்த தகவலின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா களத்தில் இறங்கி, தீவிர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து உடனடியாக டெல்லி காவல்துறையினரை அழைத்து விசாரித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காயமடைந்தவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். முன்னதாக, வேனில் வெடிப்பு நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளிவந்த நிலையில், இந்த வெடிப்பு ஹூண்டாய் ஐ-20 ரக காரில் தான் நிகழ்ந்தது என்று அமித் ஷா திட்டவட்டமாக உறுதிப்படுத்தினார்.

தற்போது, வெடிப்பு நிகழ்ந்த ஐ-20 கார், காவல்துறை மற்றும் தடயவியல் குழுவால்  பறிமுதல் செய்யப்பட்டு, தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. காரில் சரியாக என்ன இருந்தது, ஏதேனும் சந்தேகத்திற்குரிய வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும்  கைப்பற்றப்பட்டு, வெடிப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் உறுதியான சோதனை நடத்தப்படுகிறது.

புலன் விசாரணையில் வெளியான மிக முக்கியத் தகவல் என்னவெனில், வெடிப்பு நிகழ்ந்த ஐ-20 காரின் உரிமையாளரின் பெயர் நதீம் கான் என்பதாகும். இந்தக் காரின் பதிவு ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்தது என்பதும் உறுதியாகியுள்ளது. கார் உரிமையாளர் நதீம் கான் குறித்த பின்னணி விசாரணை  தற்போது டெல்லி காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அனைத்து அதிகாரிகளாலும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்குப் பிறகு உண்மை விவரம் வெளியிடப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks