பள்ளியில் டாப்பராக இருந்தால்தான் நடிக்க முடியும் என பயந்தேன்! - நடிகை அனுபமா பரமேஸ்வரன் சுவாரஸ்யம்! I feared I couldnt act as I wasn't a school topper - Actress Anupama Parameswaran shares interesting childhood memory

படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை என்று வளர்ந்த பிறகுதான் தெரிந்தது நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது பள்ளிப்பருவ சுவாரஸ்யத்தை அதிரடியாகப் பகிர்ந்ததால் ரசிகர்கள் மத்தியில் வைரல்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தென்னிந்திய மொழிகளில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது பள்ளிப்பருவ நினைவுகள் குறித்துப் பேசிய சுவாரஸ்யமான விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அதிரடியாக அறிமுகமானவர் அனுபமா. அதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷின் 'கொடி' படம் மூலம் வந்த இவர், இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக 'பைசன்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது பள்ளிப்பருவ நினைவுகளைப் பகிர்ந்த அனுபமா, சின்ன வயதில் இருந்தே நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், என் பள்ளியில், முதலிடம் பிடிக்கிறவர்களுக்குத்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று திரைசேர்க்கை செய்தார்.

இதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். ஏனென்றால், நன்றாகப் படிப்பவர்களால்தான் பெரிய வசனங்களை மனப்பாடம் பண்ணிச் சொல்ல முடியும் என்று அவர்கள் நம்பினர். அது என் மனதில் ஆழமாகப் பதிந்தது. நான் பள்ளியில் டாப்பர் இல்லை என்பதால், நடிக்க முடியாது என்ற பயத்திலேயே நடிகையாக வேண்டும் என்ற என் கனவை ஒதுக்கி வைத்தேன் என்று உருக்கமாகக் கூறினார். 

மேலும், பின் நான் வளர்ந்த பிறகுதான், படிப்புக்கும் நடிப்புக்கும் சம்மந்தம் இல்லை என்று தெரியவந்தது என்றும் அனுபமா சுவாரஸ்யமாகத் தெரிவித்தார். அனுபமாவின் இந்த பகீர் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk