மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: போலி சிபிஐ அதிகாரி கைது! Fake CBI Officer Who Cheated Crores Arrested in Coimbatore by Delhi CBI Team

மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி:  போலி சிபிஐ அதிகாரி கைது! Fake CBI Officer Who Cheated Crores Arrested in Coimbatore by Delhi CBI Team

கோடிக்கணக்கில் மோசடி: சித்திரவேல் வீட்டில் போலி அடையாள அட்டைகள் பறிமுதல்: ரேஸ்கோர்ஸ் பகுதியில் பரபரப்பு

கோவை, அக்டோபர் 15: டெல்லி உட்படப் பல நகரங்களில் தன்னைக் 'சிபிஐ அதிகாரி' எனக் கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்து வந்த ஒருவரை, டெல்லி சிபிஐ அதிகாரிகள் இன்று (அக். 15) கோவையில் கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

மோசடி பின்னணி:

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல் (32). இவர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தன்னைக் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி எனக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.  குறிப்பாக, மத்திய அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிப்பது, மற்றும் ஆன்லைன் மூலமான மோசடிகளிலும் இவர் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

கைது நடவடிக்கை:

சித்திரவேலின் மோசடிகள் குறித்து டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்ததையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரைத் தேடி வந்தனர். அப்போது, சித்திரவேல் கோவையில் தங்கி இருப்பது குறித்த ரகசியத் தகவல் டெல்லி சிபிஐ அதிகாரிகளுக்குக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, நேற்று கோவை வந்தடைந்த டெல்லி சிபிஐ அதிகாரிகள், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று சித்திரவேலைக் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டவை:

சித்திரவேலின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சிபிஐ அதிகாரி தோற்றத்தில் இருந்த போலி அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஏராளமான போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லிக்கு அழைத்துச் செல்ல அனுமதி:

கைது செய்யப்பட்ட சித்திரவேலை, மத்திய ஆயுதப்படை போலீசாரின் உதவியுடன் தனி இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், இன்று கோவை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சித்திரவேலை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சிவக்குமார், சித்திரவேலை டெல்லிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கினார்.  இதனையடுத்து, சிபிஐ அதிகாரிகள் சித்திரவேலை டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். அவர் டெல்லியில் உள்ள கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks