வடகிழக்குப் பருவமழை: சென்னை ரிப்பன் மாளிகைக் கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு! Udhayanidhi Stalin Reviews Zonal-Wise Preparedness with Minister K.N. Nehru and Mayor Priya

அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மேயர் பிரியா உடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்!

சென்னை, அக்டோபர் 16: தமிழகத்தின் முக்கிய மழைக்காலமான வடகிழக்குப் பருவமழை நாளை (அக். 16, 2025) முதல் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளான இன்று (அக். 15), துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

பருவமழை நிலவரம்:

இந்தியாவில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்குப் பருவமழையாகப் பதிவு செய்யப்படுகிறது.

இந்தியாவே தென்மேற்குப் பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழகத்தில் இந்த வடகிழக்குப் பருவமழைதான் அதிக அளவில் மழைப் பொழிவைத் தரும்.

பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. இதனால், முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

துணை முதல்வர் ஆய்வு:

இந்தச் சூழ்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு, மண்டல வாரியாக செய்யப்பட்டுள்ள  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த தயார்நிலையை அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர் கே.என். நேரு (நகராட்சி நிர்வாகம்), சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி உயரதிகாரிகளும் உடன் இருந்தனர்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk