நாளை (அக். 16) முதல் 19-ஆம் தேதி வரை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் முனையங்களுக்குப் பேருந்துகள்!
சென்னை, அக்டோபர் 15: வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, நாளை (அக். 16) முதல் வரும் 19-ஆம் தேதி வரை 4 நாட்களுக்குக் கூடுதலாக 275 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்தப் பேருந்துகள், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்துப் பின்வரும் முக்கியப் பேருந்து முனையங்களுக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல இயக்கப்படும்:
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்
கோயம்பேடு பேருந்து முனையம்
மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்
பயணிகள் இந்தச் சிறப்புப் பேருந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
in
தமிழகம்