Bihar Politics: பீகாரின் இளம் பாடகி மைதிலி தாக்கூர் அரசியலில் பிரவேசம்: அலிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிப்பு! Popular Singer Maithili Thakur Announced as BJP Candidate for Alinagar Constituency

Bihar Politics: பீகாரின் இளம் பாடகி மைதிலி தாக்கூர் அரசியலில் பிரவேசம்: அலிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிப்பு!  Popular Singer Maithili Thakur Announced as BJP Candidate for Alinagar Constituency

25 வயதான நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர் பாஜக-வில் இணைந்த அடுத்த நாளே வேட்பாளராக அறிவிப்பு; வெற்றி வாய்ப்பு குறித்து எதிர்பார்ப்பு!

பாட்னா, அக்டோபர் 15: இசை உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள பீகாரைச் சேர்ந்த இளம் நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர் (வயது 25), இப்போது அரசியலில் களம் இறங்கியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்த அடுத்த நாளே, பீகாரின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான அலிநகர் தொகுதியில் அவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக-வின் அறிவிப்பு:

பாஜக முதல் கட்டமாக 71 வேட்பாளர்களையும், இரண்டாம் கட்டமாக மேலும் 12 பேரையும் அறிவித்துள்ளது. இதில் இளம் பாடகி மைதிலி தாக்கூரின் பெயர் இடம் பெற்றிருப்பது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைதிலி தாக்கூர் நேற்று முன்தினம் (அக். 13) பாஜக-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அலிநகர் தொகுதியின் அரசியல் பின்னணி:

அலிநகர் தொகுதியில் சுமார் 20 சதவீத முஸ்லிம் வாக்காளர்களும், சுமார் 15 சதவீத மைதிலி மொழி பேசும் வாக்காளர்களும் உள்ளனர்.

இந்தச் சூழலில், மைதிலி கலாச்சாரத்தைச் சேர்ந்தவரும், பெரும் புகழும் பெற்றவருமான மைதிலி தாக்கூரை நிறுத்துவது கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என பாஜக வட்டாரங்கள் நம்புகின்றன.

முன்னாள் எம்எல்ஏ-வின் விலகல்:

கடந்த 2020 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பின்னர் பாஜக-வில் இணைந்த மிஸ்ரிலால் யாதவ், இந்த முறை மீண்டும் சீட்டை எதிர்பார்த்தார்.ஆனால், மைதிலி தாக்கூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அவர் கட்சியை விட்டு விலகியுள்ளார். கடந்த 2010 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) இத்தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது.

மைதிலி தாக்கூரின் பிரபலமும் அங்கீகாரமும்:

மைதிலி தாக்கூர் மைதிலி, போஜ்புரி, பஞ்சாபி, பெங்காலி, இந்தி, மராத்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பாடி சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். இவரை 2024-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து "சிறந்த படைப்பாளி விருது" வழங்கிப் பாராட்டினார்.

இசை உலகில் கண்ட வெற்றியைப் போலவே, மைதிலி தாக்கூர் பீகார் அரசியலிலும் அதே வெற்றியைப் பதிவு செய்யத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks