இண்டிகோ விமானக் கண்ணாடியில் திடீர் விரிசல்; 76 பயணிகள் பத்திரமாகத் தரையிறங்கினர்! IndiGo Flight Windshield Cracks Mid-Air; Lands Safely in Chennai

மதுரையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானக் கண்ணாடியில் திடீர் விரிசல்: பயணிகள் பத்திரமாகத் தரையிறங்கினர்!

சென்னை, அக்டோபர் 11: மதுரையிலிருந்து சென்னைக்கு 76 பயணிகளுடன் வந்த இண்டிகோ விமானத்தின் முன்பக்கக் கண்ணாடியில் (Windshield) திடீரென விரிசல் ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு (அக். 10) பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், விமானம் எந்தவிதப் பாதிப்பும் இன்றி பத்திரமாகத் தரையிறங்கியது பயணிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியது.

சம்பவ விவரப்படி, மதுரையிலிருந்து வந்த இண்டிகோ விமானம் இரவு 11.12 மணிக்குச் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரானது. அப்போது, விமானத்தின் முன்பக்கக் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்து அதிர்ச்சிக்குள்ளானார். உடனடியாக அவர் சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தார்.

உடனடியாகச் செயல்பட்ட விமான நிலைய அதிகாரிகள், விமானம் பத்திரமாகத் தரையிறங்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் செய்தனர். விரிசல் இருந்தபோதிலும், விமானி விமானத்தை திறம்பட இயக்கிப் பத்திரமாகத் தரையிறக்கினார். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்யும் பழுதுபார்க்கும் பணிக்காக, விமானம் 95-வது நடைமேடைக்குக் கொண்டு செல்லப்பட்டு, கண்ணாடியை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பதற்றம் நிலவியது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk