பேருந்து விபத்தில் 16 பேர் படுகாயம்; பிரதமர் மோடி இரங்கல்; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஜெய்சால்மர், அக்டோபர் 15: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த கோர விபத்தில், அதில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து விவரம்:
இந்தச் சோகமான விபத்து அக்டோபர் 14, 2025 அன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் நடந்தது.
பேருந்தில் மொத்தம் 57 பயணிகள் பயணித்துள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் ஜெய்சால்மரில் இருந்து புறப்பட்ட பேருந்து, நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, அதன் பின்புறத்தில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியது.
இதனைக் கண்ட கடைசி வரிசையில் அமர்ந்திருந்த பயணிகள் கூச்சலிட்டனர். உடனே ஓட்டுநர் பேருந்தைச் சாலையோரமாக நிறுத்தியுள்ளார். ஆனால், பயணிகள் கீழே இறங்குவதற்குள் நொடிப்பொழுதில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
மீட்புப் பணி மற்றும் முதற்கட்ட விசாரணை:
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த உள்ளூர்வாசிகளும், அவ்வழியாகச் சென்றவர்களும் மீட்புப் பணிகளில் உதவினர். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் போலீசார் வந்து தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிருடன் எரிந்தனர். காயமடைந்த பயணிகள் முதலில் ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படுகாயமடைந்த 16 பேர் பின்னர் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய பேருந்து ஐந்து நாட்களுக்கு முன்புதான் வாங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
முதல்வர் ஆய்வு மற்றும் பிரதமர் இரங்கல்:
இந்த கோர விபத்து குறித்து அறிந்ததும், ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மா சம்பவ இடமான ஜெய்சால்மருக்கு வந்து, சேதமடைந்த பேருந்தை ஆய்வு செய்ததாக அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் பிரதாப் சிங், காயமடைந்த அனைத்துப் பயணிகளுக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்க உதவி எண்களும் வழங்கப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
Distressed by the loss of lives due to a mishap in Jaisalmer, Rajasthan. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured.
— PMO India (@PMOIndia) October 14, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of…
