பணிப்பெண் பெயரில் ரூ. 1.75 கோடி மோசடி ; பாதிக்கப்பட்டவரை வீடு புகுந்து தாக்கிய ஜிம் உரிமையாளர் கைது! Gym Owner Srinivasan Arrested for ₹1.75 Crore Loan Fraud

பணிப்பெண் பெயரில்  ரூ. 1.75 கோடி மோசடி ; பாதிக்கப்பட்டவரை வீடு புகுந்து தாக்கிய ஜிம் உரிமையாளர் கைது! Gym Owner Srinivasan Arrested for ₹1.75 Crore Loan Fraud

வெகுண்டெழுந்த ஜிம் உரிமையாளர் மனைவி, நண்பர்களுடன் வீடு புகுந்து தாக்குதல்; குற்றப்பிரிவு சட்டம் பாய்ந்தது – பிரதான குற்றவாளி கைது!

சென்னை, அக்டோபர் 10: தனியாக உடற்பயிற்சிக் கூடம் அமைத்துத் தருவதாக நம்பவைத்து, ஒரு பெண்ணின் பெயரில் வங்கியில் ரூ. 1.75 கோடி கடன் வாங்கி மோசடி செய்த ஜிம் உரிமையாளரை சென்னை காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த உரிமையாளர் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் சென்று பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கு விவரப்படி, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பவித்ரா என்பவர், திருமுல்லைவாயலைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது மனைவி அன்னபூரணி நடத்தி வந்த SKALE FITNESS என்ற தனியார் உடற்பயிற்சிக் கூடத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். பவித்ராவுக்குத் தனியாக ஜிம் கிளை அமைத்துத் தருவதாகக் கூறி வசீகரித்த சீனிவாசன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாரிமுனையில் உள்ள யூகோ வங்கி மூலம் பவித்ரா பெயரில் ரூ. 1.75 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால், சீனிவாசனும் அவரது மனைவியும் கிளை எதையும் தொடங்காமல், பணத்தை மோசடி செய்து ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் திடுக்கிட்ட பவித்ரா, வங்கியில் இருந்து வந்த கடனைத் திருப்பிச் செலுத்துமாறு வந்த நிர்பந்தம் காரணமாக கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இந்தச் சூழலில், கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சீனிவாசன், அவரது மனைவி அன்னபூரணி உட்பட 4 பேர், திருவல்லிக்கேணியில் உள்ள பவித்ரா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆபாசமாகத் திட்டி தகராறில் ஈடுபட்டனர். மேலும், அவரது தாயாரை ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், பவித்ராவின் சகோதரி கண்மணியைத் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் பவித்ரா புகார் அளித்தார். ஆய்வுப் பிரிவினர் அத்துமீறி நுழைதல், ஆபாசமாகத் திட்டுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த சீனிவாசனை நேற்று (அக். 9) திருமுல்லைவாயல் பகுதியில் வைத்துப் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப்பின்னர் அவர் எழும்பூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சீனிவாசன் இந்த மோசடி போல பலரையும் ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மனைவி அன்னபூரணி உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks