Breaking News: 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை! Heavy rain warning for 8 districts in Tamil Nadu today IMD alert!

நீலகிரி, தேனி, கோவை உட்பட தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை, செப்டம்பர் 20: தமிழகத்தில் இன்று நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடி, மின்னல் மற்றும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!