இந்திய விமானங்களுக்குத் தடை.. பாகிஸ்தானுக்கு ரூ.1,240 கோடி இழப்பு!

இந்திய விமானங்களுக்குத் தடை.. பாகிஸ்தானுக்கு ரூ.1,240 கோடி இழப்பு!





ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய விமானங்களுக்குத் தனது வான்வெளியில் பறக்கப் பாகிஸ்தான் தடை விதித்ததால், அந்நாட்டுக்கு இதுவரை ரூ.1,240 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் "அதிர்ச்சியை" ஏற்படுத்தியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம், பாகிஸ்தானுக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதற்குப் போட்டியாக, பாகிஸ்தானும் இந்திய விமானங்களுக்குத் தனது வான்வெளியை மூடியது.

ஆனால், இந்தத் தடை பாகிஸ்தானுக்குத்தான் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் பிற சர்வதேச விமான நிறுவனங்கள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவிற்குச் செல்லப் பாகிஸ்தானின் வான்வெளியைப் பயன்படுத்தும்போது அந்நாட்டுக்குக் கட்டணம் செலுத்துகின்றன. இந்த வருவாய் தற்போது முற்றிலும் தடைபட்டதால், பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் "சிரமத்திற்கு" உள்ளாகியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் விதிக்கப்பட்ட வான்வெளி தடையால் சுமார் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இழப்பு ரூ.1,240 கோடியாக அதிகரித்திருப்பது அந்நாட்டின் நிதி நிலைமையைப் பற்றிக் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!