மரம் ஒரு கிளை வெட்டினாலும் 6 மாதம் சிறை - சீமான் அதிரடிப் பேச்சு! 6 Months Jail for Cutting a Tree Branch, Says Seeman

மரம் ஒரு கிளை வெட்டினாலும் 6 மாதம் சிறை - சீமான் அதிரடிப் பேச்சு! 6 Months Jail for Cutting a Tree Branch, Says Seeman

 

திருத்தணி அடுத்த அருங்குளம் கூட்டுச் சாலையில், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் 'மரங்களின் மாநாடு' நடைபெற்றது. இதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, மரங்களை வளர்த்த அப்துல் கலாம், நம்மாழ்வார், நடிகர் விவேக் உள்ளிட்ட 5 பேரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


மாநாட்டில் சீமான் பேசியது:

"இந்த மாநாடு நாட்டுக்காக நிற்பவர்களால் மட்டுமே நடத்த முடியும். மரங்கள் இல்லை என்றால் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. மரங்கள் நச்சுக்காற்றை சுவாசித்து நமக்குத் தூய்மையான காற்றை வழங்குகின்றன. மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி, இனி புயல் மழை மட்டுமே பெய்யும். இதனால் கடல் பொங்கி, கடலோர கிராமங்கள் அழியும் அபாயம் உள்ளது.

  • மரம் வெட்டினால் சிறை: நான் ஆட்சிக்கு வந்தால், மரத்தின் ஒரு கிளை வெட்டினாலும் 6 மாதம் சிறைத்தண்டனை வழங்குவேன்.

  • மாணவர்களுக்கு மதிப்பெண்: மாணவர்கள் 100 மரக்கன்றுகள் நட்டால் பொதுத்தேர்வில் 10 மதிப்பெண்களும், 1000 மரக்கன்றுகள் நட்டால் அரசுப் பணிக்கான தேர்வில் 10 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

  • அரசு மரியாதை: 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்.

வேட்பாளர்கள் அறிமுகம்:

இந்த மாநாட்டில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் இருவரை சீமான் அறிமுகப்படுத்தினார். திருவள்ளூர் தொகுதியில் செந்தில்குமாரும், திருத்தணி தொகுதியில் சந்திரனும் போட்டியிடுவார்கள் என்றும், அவர்களுக்கு 'விவசாயி' சின்னத்தில் வாக்களிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks