விருதுநகரில் சோகம்.. குளிர்பானம் குடித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு! Virudhunagar: 5-Year-Old Boy Collapses and Dies After Drinking From Bottle on Roadside

கீழே கிடந்த பாட்டிலில் இருந்து குளிர்பானம் குடித்தபோது வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்த சோகம்!


விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாபட்டி கிராமத்தில், கீழே கிடந்த பாட்டிலில் இருந்த குளிர்பானத்தைக் குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூமாபட்டியைச் சேர்ந்த வீரச்சாமி மற்றும் பஞ்சவர்ணம் தம்பதியரின் மகன் கோடீஸ்வரன். நேற்று விடுமுறை என்பதால், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கோடீஸ்வரன், கீழே கிடந்த ஒரு பாட்டிலில் இருந்த குளிர்பானத்தைக் குடித்ததாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரத்திலேயே வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்த சிறுவனை, அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட விடும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!