கணவர் வீட்டில் இருந்து காணாமல் போன இளம்பெண் சடலமாக மீட்பு..!

திருச்சூர்:

திருச்சூர் அருகே கணவர் வீட்டில் இருந்து காணாமல் போன 20 வயது இளம்பெண் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

கணவரின் வீட்டில் இருந்து காணாமல் போன பெண்ணின் சடலம் கனோலி கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கந்தச்சங்கடவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியரின் மகள் நிஜிஷா (20) என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வெங்கிடங்கு பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணனின் மனைவி.

நிஜிஷாவுக்கும், ஹரிகிருஷ்ணனுக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. செவ்வாய்கிழமை இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. புதன்கிழமை நள்ளிரவு நிஜிஷா வீட்டில் இருந்து காணாமல் போனார். ஹரிகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள பகுதிகளில் தேடியும் அவரைக் காணவில்லை.

பாவரட்டி போலீசார் மற்றும் குருவாயூரில் இருந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அக்கம் பக்கத்திலுள்ள கிணறுகள் மற்றும் குளங்களில் சோதனை செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், ஆனால் பலனளிக்கவில்லை. புதன்கிழமை காலை 10 மணியளவில் நேரு பூங்காவை ஒட்டிய கால்வாயில் நிஜிஷாவின் சடலத்தை உள்ளூர்வாசிகள் கண்டெடுத்தனர்.

நிஜிஷாவின் கணவர் ஹரிகிருஷ்ணன் ஓட்டுநர். நிஜிஷாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்து உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

                                                                                                                                      – Maharaja B

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk