தமிழர் திருநாளுக்குத் தயாராவோம்! – சென்னை சங்கமத்தை ஜனவரி 14-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! CM Stalin to Inaugurate Chennai Sangamam

நம்ம ஊரு நம்ம திருவிழா: 4 நாட்கள் தமிழகம் முழுவதும் கலைநிகழ்ச்சிகள் கோலாகலம்; நாட்டுப்புறக் கலைஞர்களுக்குப் பிரம்மாண்ட மேடை!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தின் வீரத்தையும், கலைப் பண்பாட்டையும் பறைசாற்றும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு நம்ம திருவிழா' கலைநிகழ்ச்சிகளைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வரும் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் இன்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, மக்களைத் தமிழர் திருநாளுக்குத் தயாராகும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் இந்தச் சென்னை சங்கமம், கிராமியக் கலைஞர்களுக்குப் பெரிய மேடையை அமைத்துக் கொடுப்பதோடு, பாரம்பரியக் கலைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாகவும் திகழ்கிறது. இந்த ஆண்டு, வரும் ஜனவரி 14-ஆம் தேதி பிரம்மாண்டமான தொடக்க விழா நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 15 முதல் 18-ஆம் தேதி வரை சென்னை மாநகரின் பல்வேறு இடங்கள் மற்றும் இதர மாவட்டங்களிலும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய வீரக் கலைகள் மற்றும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்க உள்ளன. இது குறித்து முதலமைச்சர் விடுத்துள்ள செய்தியில், "நமது பண்பாட்டைப் பறைசாற்றும் சென்னை சங்கமம் நம்ம ஊரு நம்ம திருவிழா கொண்டாட்டத்தில், அனைவரும் கலந்துகொண்டு மகிழும் வகையில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். விடுமுறை நாட்களில் நடைபெறும் இந்தக் கலைத் திருவிழா, சென்னைவாசிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு சிறப்பான பண்பாட்டு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.







Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk