ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: CBI விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை! Supreme Court Stays Madras HC Order to Transfer Armstrong Murder Case to CBI

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: CBI விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!  Supreme Court Stays Madras HC Order to Transfer Armstrong Murder Case to CBI

‘குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் சிபிஐ அவசியமில்லை’ – தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு (CBI) மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக காவல்துறை இந்த வழக்கில் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ள நிலையில், சிபிஐ விசாரணை தேவையில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை சிபிஐ-க்கு மாற்றி அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் தமிழக காவல்துறை தங்கள் விசாரணையை நிறைவு செய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், சிபிஐ விசாரணை மேற்கொள்வது அவசியமற்றது எனக் குறிப்பிட்டது.

மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், ஏற்கனவே விசாரணை முடிந்துவிட்ட நிலையில், சிபிஐ-க்கு மாற்றுவதற்கான காரணங்கள் குறித்து விரிவாக விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதன் மூலம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks