ஓடும் ரயிலில் ரூ.80 லட்சம் நகைக் கொள்ளை: "ஹரியானா சான்ஸி" கும்பல் கோவாவில் கைது! Haryana Sansi' Train Robbery Gang Arrested; ₹80 Lakh Gold Recovered in Swift RPF Action

நொடிப்பொழுதில் ஜிப் திறக்காமல் திருடிய கும்பல்; ரயில்வே பாதுகாப்புப் படையின் 11 மணி நேரத் தேடுதல் வேட்டையில் நகைகள் மீட்பு – தொழில் அதிபர் அதிர்ச்சி!

தலைநகர் சென்னையில் இருந்து புறப்பட்ட விரைவு ரயிலில், நொடிப்பொழுதில் பயணப் பையின் ஜிப்பைத் திறக்காமலேயே அதிலிருந்த சுமார் 80 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்த "ஹரியானா சான்ஸி" என்ற தொழில்முறைப் பழங்குடிக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) கோவாவில் வைத்து உடனடியாகக் கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டனர். 

ரயில்வே போலீசாரின் இந்த மின்னல் வேகச் செயல்பாடு கள அளவில் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த நவம்பர் 13ஆம் தேதி கேரள மாநிலத்திற்குச் சொந்த ஊர் செல்ல ரயிலில் கிளம்பிய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அப்துல் நசீர் என்பவரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர். இவர் தனது பயணப் பையில் 80 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளார். கேரளாவில் இறங்கி வீடு திரும்பிய பின்னர், தனது பையைத் திறந்து பார்த்தபோது, பையின் ஜிப் திறக்கப்படாமல் அப்படியே இருந்த நிலையில், உள்ளே இருந்த நகைகள் திருடு போயிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். 

இதனையடுத்து, அவர் கேரளா ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரிடம் முறைப்படி புகார் அளித்தார்.விசாரணையைத் தொடங்கிய சென்னை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், உடனடியாகச் சென்ட்ரல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, ரயில் பயணிகளின் பட்டியலையும் சேகரித்தனர். இதில், அந்த ரயிலில் தவறான பெட்டியில் ஏறிய நான்கு பேர் கொண்ட கும்பல் இந்த கைவரிசையைக் காட்டிவிட்டுத் தப்பிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. அந்தக் கும்பல் தொடர்ந்து கோவாவுக்குச் செல்லும் ரயிலில் ஏறியிருப்பது உளவுத் தகவலின் மூலம் தெரியவந்தது. 

உடனடியாகத் தகவல் கோவா ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அளிக்கப்பட்ட அங்க அடையாளங்களின்படி செயல்பட்ட கோவா போலீஸார், அந்த நான்கு பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தில்பாக் (62), ஜித்தேந்தர் (45), மனோஜ் குமார் (36), ராஜேஷ் (42) என்பது தெரியவந்தது.

இவர்கள் குடும்பம் போல ரயில்கள், பேருந்துகளில் பயணித்து, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி முதியவர்களைக் குறிவைத்துத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்தது. குறிப்பாக, முதியவர்கள் ரயில் நிலையத்தில் இறங்கும்போது அவர்களுக்கு உதவுவதுபோல் அருகே சென்று, நொடிப்பொழுதில் பைகளுக்குள் கைவரிசையைக் காட்டி நகைகளைத் திருடுவதை இந்தக் கும்பல் ஒரு தொழில்நுட்பமாக வைத்திருந்ததும், கொள்ளையடித்தவுடன் உடனடியாக ரயில்களை மாற்றிச் சொந்த ஊருக்குத் தப்பிச் செல்வதும் இவர்களது செயல்பாட்டு முறை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதே பாணியில்தான் முதியவரான அப்துல் நசீரிடமும் அவர்கள் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். ரயில்வே பாதுகாப்புப் படையினர், துரிதமாகச் செயல்பட்டு 11 மணி நேரத்தில் திருடப்பட்ட 80 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டிருப்பது, இந்த பிரச்சினையின் தீவிரத்தைக் கருதி பாராட்டுகளைப் பெற்றுள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk