Diwali Rush in T. Nagar: தீபாவளிப் பொருட்கள் வாங்க மக்கள் படையெடுப்பு: தி.நகரில் போக்குவரத்தைச் சீராக்க 168 போலீசார் குவிப்பு! Chennai Traffic Police Take Measures to Control Crowds Ahead of Deepavali Festival

பன்னடுக்குத் தானியங்கி வாகனம் உட்படப் பொதுமக்களுக்காக 5 இடங்களில் பார்க்கிங் வசதி!

சென்னை, அக்டோபர் 15: வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் உள்ள தியாகராய நகர் (தி.நகர்) பகுதியில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் பொருட்கள் வாங்க அதிக அளவிலான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அங்குப் போக்குவரத்தைச் சீரமைக்கவும், பொதுமக்களின் வசதிக்காகவும் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து சீரமைப்புப் பணி:

தி.நகரில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணிக்காகக் காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள்:

காவலர் குவிப்பு: ஒரு காவல் துணை ஆணையாளர் (போக்குவரத்து - தெற்கு) தலைமையில், 2 உதவி ஆணையாளர்கள், 6 காவல் ஆய்வாளர்கள், 40 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 168 போக்குவரத்து மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

ஆயுதப்படை காவலர்கள்: இவர்களுக்கு உதவியாகப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் சீர் செய்ய 100 ஆயுதப் படை காவலர்கள் கூடுதலாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வாகன நிறுத்த ஏற்பாடுகள் (Parking Facilities):

தி.நகர் பகுதிகளுக்கு வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்காகக் கீழ்க்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது:

பன்னடுக்குத் தானியங்கி வாகன நிறுத்தம்: தியாகராய சாலை, தணிகாசலம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள இலவசமான "பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம்.

ஜெ. அன்பழகன் மேம்பாலத்தின் கீழ்பகுதி.

பிரகாசம் சாலை மாநகராட்சி பள்ளி.

தண்டபாணி தெரு ராமகிருஷ்ணா பள்ளி.

சோமசுந்தரம் மைதானம்.

வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்தி, போக்குவரத்து காவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk