உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் புதிய விண்ணப்பங்கள்: டிசம்பர் 15 முதல் தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை! 28 Lakh New Applications Received Through Ungaludan Stalin Camps; Field Verification by Nov 30

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் புதிய விண்ணப்பங்கள்: டிசம்பர் 15 முதல் தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை! 28 Lakh New Applications Received Through Ungaludan Stalin Camps; Field Verification by Nov 30

இதுவரை 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள்; நவம்பர் 30-க்குள் கள ஆய்வு முடியும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!

சென்னை, அக்டோபர் 16: தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1 கோடியே 16 லட்சம் மகளிருக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் ₹24,000 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், விடுபட்ட கூடுதல் பயனாளிகளைச் சேர்க்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிதாக விண்ணப்பித்த தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள்:

திட்டத்தின் நோக்கம்: கூடுதல் பயனாளிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை அறிவித்தார்.

முகாம்களின் சேவை:

கிராமப்புறங்களில் முகாம்கள் மூலமாக 15 துறைகளின் வாயிலாக 45 சேவைகளும் வழங்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில் 13 துறைகளின் வாயிலாக 43 சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நவம்பர் 15-ஆம் தேதி வரை 10,000 முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் (அக். 15) வரை 9,055 முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.  மகத்தான வரவேற்பு: இந்த முகாம்களுக்குப் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

புதிய உரிமைத் தொகை விண்ணப்பங்களின் நிலை:

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் இதுவரை 28 லட்சம் மகளீர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.  புதிதாகப் பெறப்பட்டுள்ள இந்த விண்ணப்பங்களை வருவாய்த் துறை மூலமாகக் கள ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அறிவிப்பு: நவம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்தக் கள ஆய்வு முடிவடைந்து, தகுதியான மகளிருக்கு வருகிற டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முடிவெடுத்துள்ளார். தமிழ்நாட்டு மகளினுடைய பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு என்றும் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks