வடமாநிலத்தவர் குறித்த அவதூறு: காவல் ஆணையர் அலுவலகத்தில் முற்றுகை! North Indians Protest at Chennai Police Commissioners Office

சமூக வலைதளத்தில் வட மாநிலத்தவர்கள் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


சமூக வலைத்தளங்களில் வடமாநிலத்தவர் மற்றும் ராஜஸ்தான் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக, 'பாலா' என்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சுமார் 50-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பாலா, நேரடியாகவும் ஆபாசமாகத் திட்டியதாக வழக்கறிஞர்கள் சரசமுத்து, மோனிகா, சஞ்சய் ஆகியோர் குற்றம்சாட்டினர். அவர்கள், ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.

புகாரின் முக்கிய அம்சங்கள்:

  • சமூக வலைத்தளங்களில் 'பாலா' என்பவர் வடமாநிலத்தவர் குறித்து இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார்.

  • சௌகார்பேட்டையில் உள்ள பாபா ராம்தேவ் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜஸ்தான் பெண்கள் குறித்து அவர் இழிவாகப் பேசியுள்ளார்.

  • ஏற்கெனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த பாலா, தற்போது மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • தென்னிந்தியர்கள், வட இந்தியர்கள் எனப் பிரித்துப் பார்க்காமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் பாலா செயல்படுவதாகப் புகார் அளித்தவர்கள் தெரிவித்தனர்.

பாலா மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த முற்றுகையால், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!