மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்துக்கள்: உயர்நீதிமன்றம் கேள்வி? HC Madurai Bench Orders Submission of Meenakshi Temple Property Records

 

மீனாட்சியம்மன் கோவில் சொத்து ஆவண பதிவேட்டை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 



மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் சொத்துக்களை மீட்டுப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோவிலை புனரமைத்து விரைவாகக் கும்பாபிஷேகம் நடத்தவும் உத்தரவிடக் கோரிய வழக்கில், கோவில் இணை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீதிபதிகள் எழுப்பிய கேள்வி:

  • "கோவிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகள் குறித்து மனுதாரர் குறிப்பிட்டுச் சொன்னால்தான் தெரியுமா?"

  • "கோவில் சொத்துக்கள் குறித்த ஆவணப் பதிவேட்டைத் தாக்கல் செய்ய வேண்டும்."

  • "கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்."

மனுதாரர் எந்தெந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன எனக் குறிப்பிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மேலும், கோவில் மற்றும் அதன் துணை கோவில்களின் சொத்துக்கள் குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk