குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா! Vice President Jagdeep Dhankhar resigns!

 குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா!


2022 ஆகஸ்ட் 11ல் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியேற்ற ஜெகதீப் தன்கர், கடைசியாக இன்று காலை நாடாளுமன்ற மாநிலங்களவையை நடத்தியிருந்தார். 2027ம் ஆண்டுவரை பதவிக் காலம் உள்ள நிலையில் மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாம குறித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில், மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றி, என் உடல்நலத்தை முன்னிலைப்படுத்தி, இந்தியாவின் துணைத் தலைவர் பதவியை, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 67-க்கேற்ப, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ராஜினாமா செய்கிறேன்.

இந்திய குடியரசுத் தலைவராக இருந்த நீங்கள் எனக்கு அளித்த உறுதியான ஆதரவு மற்றும் எங்கள் இடையிலான அமைதியான, சிறந்த பணியியல் உறவை மனமார்ந்த நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

பிரதமர் மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களுக்கும் என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளவில்லாததாக இருந்தது; என் பதவிக்காலத்தில் பலத்தை கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து நான் பெற்ற பரிவு, நம்பிக்கை மற்றும் நேசம் என்றும் என் நினைவில் நிலைத்து நிற்கும்.  இந்தியாவின் மக்களாட்சியில் துணைத் தலைவராக இருந்துபோன அனுபவங்களும், பார்வைகளும் எனக்கு அளித்த மிகமுக்கியமான தேர்ச்சியெனக் கருதுகிறேன்.

இந்தியாவின் அபூர்வமான பொருளாதார முன்னேற்றங்களையும், இதுவரையிலில்லாத வளர்ச்சியையும் நேரில் பார்த்து அதில் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதில் பெருமை மற்றும் திருப்தி அடைகிறேன். எங்கள் தேசத்தின் வரலாற்றில் இத்தகைய மாற்றங்களைச் சாட்சியாகப் பார்க்கும் இந்தக் காலகட்டத்தில் பணியாற்றியதற்கு நன்றி.

இந்தப் பதவியிலிருந்து விலகும் தருவாயில், பாரதத்தின் உலகளாவிய உயர்வையும், சாதனைகளையும் பார்த்துப் பெருமைப்படுகிறேன்; எதிர்காலம் பளிச்செனும் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது.  இவ்வாறு அந்தக் கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com