மனைவி பிரிந்து சென்ற ஆத்திரம்! சென்னையில் நடந்த கொலை வழக்கில் அதிரடித் தீர்ப்பு! Chennai Court Awards Life Imprisonment to Two in 2022 Guindy Murder Case

பிரிந்து சென்ற மனைவியின் காதலனைத் தீர்த்துக்கட்டிய பாண்டியன்; கிண்டி போலீசாரின் அதிரடிப் புலனாய்விற்கு வெற்றி!

சென்னையில் கடந்த 2022-ஆம் ஆண்டு மனைவியுடன் வசித்து வந்த நபரை ஆத்திரத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் மற்றும் அவரது நண்பருக்குச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து சென்ற மனைவி, வேறொருவருடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அரங்கேற்றப்பட்ட இந்தக் கொலைச் சம்பவம், கிண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கை மிகத் துல்லியமாகப் புலனாய்வு செய்த ஜே-3 கிண்டி காவல் நிலையப் போலீசார், குற்றவாளிகளுக்குத் தப்ப முடியாத அளவிற்கு ஆதாரங்களைச் சமர்ப்பித்ததன் விளைவாக, தற்போது இருவருக்கும் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை கிடைத்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி விடியற்காலை, சென்னை வேளச்சேரி சாலையில் வசித்து வந்த கார்த்திக் என்பவர் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். கார்த்திக்குடன் வசித்து வந்த சந்தியா என்பவர் தனது கணவர் பாண்டியனைப் பிரிந்து அவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் பாண்டியன் (32) மற்றும் அவரது நண்பர் பாஸ்கர் (42) ஆகியோர் கத்தி மற்றும் கட்டையுடன் சந்தியாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த கார்த்திக்கைக் கத்தியால் குத்தியும் கட்டையால் தாக்கியும் படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்துச் சந்தியா அளித்த புகாரின் பேரில், கிண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து பாண்டியன் மற்றும் பாஸ்கரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்குச் சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள 19-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஜே-3 கிண்டி காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நேற்று (09.01.2026) இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எதிரிகளான பாண்டியன் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த கிண்டி காவல் குழுவினரை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk