கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. மதியழகனை 5 நாட்கள் கஸ்டடியில் எடுக்க SIT மனு! SIT Seeks 5-Day Custody of Thavaka Karur Secretary Mathialagan for Stampede Probe

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கோரிக்கை: நீதிமன்றக் காவலில் உள்ள மாவட்டச் செயலாளரிடம் 'தீவிர விசாரணை'க்குத் திட்டம்!

கரூர், அக்டோபர் 9: தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை, ஐந்து நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதியழகன் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. 

அந்த வழக்குகளின் விசாரணை தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காகவும், முக்கிய அம்சங்களை அறிவதற்காகவும் விசாரணைக் காவலுக்குக் (கஸ்டடி) கோரி SIT இந்த சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. SIT-யின் இந்தக் கறார் மனு குறித்த நீதிமன்றத்தின் முக்கிய முடிவு இன்று பிற்பகலில் எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk