அதிசய நிகழ்வு! - இன்று இரவு சந்திர கிரகணம்: ஆன்மீக உலகில் பெரும் பரபரப்பு! A Report on the Lunar Eclipse Happening Tonight A Major Astronomical Event


இரவு 9.47 முதல் அதிகாலை 1.31 வரை நிகழும் சந்திர கிரகத்தால் தமிழகக் கோயில்களில் நடை அடைக்கப்படுகிறது.


வானில் இன்று இரவு ஒரு "அதிசய" நிகழ்வாகச் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்தச் சந்திர கிரகணம், இந்திய நேரப்படி இரவு 9.47 மணி முதல் திங்கள் அதிகாலை 1.31 மணிவரை நிகழும் என வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு, வானியல் ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீக உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு முக்கியக் கோயில்களின் நடைகள் இன்று மாலை அடைக்கப்படும் எனக் கோயில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. கிரகணம் முடிந்த பிறகு, கோயில்கள் சுத்தம் செய்யப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெறும். கிரகண காலங்களில் கோயில்களில் வழிபடுவதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே இறைவனை மனமுருகி வழிபட வேண்டும் என ஆன்மீகப் பெரியவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


இந்தச் சந்திர கிரகணம், வானியல் ரீதியாக ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஆன்மீக ரீதியாக இது ஒரு புனிதமான நாளாகவும், குறிப்பிட்ட வழிபாடுகளை மேற்கொள்ளவும் உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் ஆன்மீகச் சூழல் நிறைந்துள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!