வாக்கு திருட்டில் ஈடுபடும் தேர்தல் ஆணையம்.. ப.சிதம்பரம் கடும் குற்றச்சாட்டு! P. Chidambaram Alleges Vote Theft and Fraudulent Voter Rolls

போலியாக வாக்காளர்களைச் சேர்த்து, நீக்கி தில்லுமுல்லு; பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுகிறது: ப.சிதம்பரம் காட்டம்!

கடந்த சில மாதங்களாக நடந்து வரும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது, போலியாக வாக்காளர்களைச் சேர்த்து, நீக்கும் தில்லு முல்லுவில் ஈடுபட்டு வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது, என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசடிகளுக்குப் பின்னால் தேர்தல் ஆணையம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் ஆணையம், பாஜகவின் கைப்பாவையாகச் செயல்படுகிறது, என்று அவர் நேரடியாகத் தாக்கினார். மேலும், அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்துள்ளதால், வாக்கு திருட்டு நடக்கக் கூடிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது, என்று அவர் குறிப்பிட்டு, இரு கட்சிகளையும் ஒரே நேரத்தில் சாடினார்.

ப.சிதம்பரத்தின் இந்த அதிர்ச்சிப் புகார், வரவிருக்கும் தேர்தல்களில் வாக்காளர் பட்டியல் பாதுகாப்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. அரசியல் கட்சிகள் இடையே இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks