நடிகர் சூர்யா வீட்டில் அதிர்ச்சி! ரூ. 42 லட்சம் மோசடி வழக்கில் பணியாட்கள் கைது! Fraud at actor Suriya's house: Domestic worker arrested with family

நடிகர் சூர்யா வீட்டில் வேலை செய்த விசுவாசப் பெண்... தங்கக் காசு திட்டத்தில் பல லட்சம் மோசடி; மாம்பலம் போலீசார் அதிரடி!


சென்னை, செப்டம்பர் 23: பிரபல நடிகர் சூர்யாவின் இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த பெண் உட்பட அவரது குடும்பத்தினர், தங்கக் காசு மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி ரூ.42 லட்சம் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மாம்பலம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நடிகர் சூர்யா வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வந்த சுலோச்சனா (52) என்பவர், தனது மகன்கள் பாலாஜி, பாஸ்கர் மற்றும் சகோதரி விஜயலட்சுமி ஆகியோருடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். மாம்பலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு நபர்களிடம் தங்கக் காசு திட்டம் என ஆசை வார்த்தை கூறிப் பணம் வசூல் செய்துள்ளார். மாதம் ரூ.5,500 முதலீடு செய்தால், மாதம் ஒரு கிராம் தங்கக் காசு வழங்கப்படும் என அந்த மோசடி கும்பல் ஆசை காட்டியுள்ளது.

இதை நம்பிப் பலரும் முதலீடு செய்த நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பணம் கொடுத்தவர்களுக்குத் தங்கக் காசுகள் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த மோசடி குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் இந்த மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட சுலோச்சனா, நடிகர் சூர்யாவின் வீட்டில் பணியாற்றி வருவது தெரியவந்தது. கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்த நான்கு நபர்கள் கும்பலையும் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மொத்தமாக ரூ.42 லட்சம் வரை மோசடி நடந்துள்ளதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!