Salem : டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம்.!

வாழப்பாடி அடுத்த டோல்கேட்டில் அரசு பஸ் ஒன்று பெண் பயணிகளை ஏற்றாமல் சென்றது. இதை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், அரசு பஸ் டிரைவர் கண்ணன், கண்டக்டர் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இதற்கிடையே அரசு பஸ் டிரைவர்கள் தரப்பில் கூறுகையில், செல்லியம்மன்நகர் பஸ் நிறுத்தத்துக்கும், டோல்கேட்டுக்கும் இடையே 200 மீட்டர்தான் தூரம் உள்ளது. மேலும் டோல்கேட்டில் பஸ் நிறுத்தம் கிடையாது. எனவே அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Popular posts from this blog

பரபரப்பு! "39 பேர் மரணம் அதிர்ச்சி; அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்" - தமிழ் தேசியக் கட்சி கடும் கண்டனம்! Karur Tragedy: Tamil Desiya Katchi slams government for negligence, narrow space allocation

"ஸ்டாலின் திட்டத்தில் வெடித்த பெரும் சர்ச்சை.. கிராம அதிகாரிகளை மிரட்டுவதாக நபர் மீது புகார்: கோட்டாட்சியரிடம் மனு! Villagers File Complaint Against Person Threatening Govt Officials in Ranipet

RTI விண்ணப்பங்களுக்கு OTP கட்டாயம்: ஜூன் 16 முதல் அமல்!