வீட்டில் பதுக்கிய 620 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!

சேலம்:

சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் ரேஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் பறக்கும் படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் நேற்று மாலை 4 மணிக்கு பள்ளப்பட்டி துரைசாமி நகரை சேர்ந்த சிவகாமி என்பவரின் வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது அவருடைய வீட்டில் 620 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக பள்ளப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த திலீப்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Popular posts from this blog

பரபரப்பு! "39 பேர் மரணம் அதிர்ச்சி; அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்" - தமிழ் தேசியக் கட்சி கடும் கண்டனம்! Karur Tragedy: Tamil Desiya Katchi slams government for negligence, narrow space allocation

RTI விண்ணப்பங்களுக்கு OTP கட்டாயம்: ஜூன் 16 முதல் அமல்!

"ஸ்டாலின் திட்டத்தில் வெடித்த பெரும் சர்ச்சை.. கிராம அதிகாரிகளை மிரட்டுவதாக நபர் மீது புகார்: கோட்டாட்சியரிடம் மனு! Villagers File Complaint Against Person Threatening Govt Officials in Ranipet