அரசு பேருந்து ஓட்டுநர்கள் குடித்துவிட்டு வந்தால் கடும் நடவடிக்கை.!

சென்னை:

சென்னையில் அரசுப் பேருந்து ஊழியர்கள் குடித்துவிட்டு பணிசெய்வதாக பல இடங்களில் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குனர், அண்மையில் அனைத்து கிளைகளின் மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

குடித்துவிட்டு பணிக்கு வரும் ஊழியர்களால் பயணிகளிடையே கெட்டப் பெயரை ஏற்படுத்துவதுடன், அரசு பேருந்துகளை மக்கள் தவிர்க்கும் வாய்ப்பு உள்ளது என்றும், பணியின் போது குடித்திருப்பது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்றும், பணிநீக்கம் உள்ளிட்ட மிகக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் நிர்வாக இயக்குனர் எச்சரித்துள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!