டபுள் ரேட்டில் வெளிநாட்டு மதுபானம்: ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள பாட்டில்கள் பறிமுதல் – விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது! Man Arrested for Selling Illicit Foreign Liquor at Double Price; Rs 3.5 Lakh Worth of Bottles Seized.

டபுள் ரேட்டில் வெளிநாட்டு மதுபானம்: ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள பாட்டில்கள் பறிமுதல் – விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது! Man Arrested for Selling Illicit Foreign Liquor at Double Price; Rs 3.5 Lakh Worth of Bottles Seized.

டெல்லியில் இருந்து 'டூட்டி ஃப்ரீ' மதுபானத்தைக் கடத்தி வந்து விற்பனை; பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை.

சென்னை, அக்டோபர் 3, 2025: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளிமாநில மதுபானங்களை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து, இருமடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்த நபரை பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கைது செய்து, சுமார் ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள 160 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர்  ஆ.அருண், உத்தரவின் பேரில், சட்டவிரோதமாக மதுபானம் விற்போரைத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையாளர் (வடக்கு) மற்றும் பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லாரிகளில் பார்சல்கள் மூலம் வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரகசியத் தகவல் (Secret Information) கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (அக். 2) காலை, கொருக்குப்பேட்டை, பிட்டி முனுசாமி தெருவில் உள்ள ஒரு கடையை சர்ப்ரைஸ் சோதனை (Surprise Check) செய்தபோது, அங்கு வெளிமாநில மதுபாட்டில்கள் சட்டவிரோத விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பேரில், பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் வழக்குப் பதிவு (Case Filed) செய்யப்பட்டு, சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வைத்திருந்த அலாவுதீன் (வயது 43), மண்ணடி, சென்னை என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ரூபாய் 3.5 லட்சம் மதிப்புள்ள 160 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கைது செய்யப்பட்ட அலாவுதீன் டெல்லி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் 'Duty Free' மதுபாட்டில்களைக் குறைந்த விலைக்கு வாங்கி வந்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருமடங்கு விலை வைத்துச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

மேலும், இவர் குழுவாகச் செயல்பட்டு இந்த விற்பனையைச் செய்து வந்ததும், ஏற்கனவே இந்தக் குழுவைச் சேர்ந்த சுனில் மற்றும் பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளதும் அம்பலமானது. அலாவுதீன் மீது ஏற்கெனவே மதுபானங்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளி அலாவுதீன் இன்று (அக். 3) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks